Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி மாற்றம்.. 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கரூர் மாவட்ட ஆட்சியராக கு ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளராக ஆர் ஜெயா ஐஏஎஸ், பொருளியல், புள்ளியல் துறை இயக்குனராக கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Government IAS Officers District Collectors

தமிழக அரசு நிர்வாக பணிகளுக்காக 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி,

* சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலராக சந்திர சேகர் சாகமூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக அ சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வணிக வரித்துறை இணை ஆணையராக ந பொன்மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலாளராக ஆர் ஜெயா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பொருளியல், புள்ளியல் துறை இயக்குனராக கலைச்செல்வி மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

* காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சினேகா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கரூர் மாவட்ட ஆட்சியராக கு ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+