தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக இன்னசென்ட் திவ்யா!
சென்னை: தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலர் ச உமா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர் இன்னசென்ட் திவ்யா தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ச. உமா: சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலர் ச உமா, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரத்னா: ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் ரத்னா வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விசாகன்: தொழில்நுட்ப கல்வி இயக்குனராக விசாகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்துராஜ்: டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக கிறிஸ்துராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்னசென்ட் திவ்யா: சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையர் இன்னசெண்ட் திவ்யா தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications