கூட்டணி தலைவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகளை மட்டும் வாபஸ் பெறுகிறார்கள்.. ஹைகோர்ட்டில் திமுக வாதம்
சென்னை: கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு எதிரான அவதூறு வழக்குகளை மட்டும் தமிழக அரசு வாபஸ் பெறுவதாக திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
அதிமுக அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எதிர்கட்சித் தலைவர்கள் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, மு.க.அழகிரி, செந்தில் பாலாஜி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி சதீஷ் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2011-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் தற்போது வரை நிலுவையில் இருப்பதாகவும், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் மீதான வழக்குகளை மட்டும் தமிழக அரசு வாபஸ் பெறுவதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, இந்த வழக்குகள் குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications