நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பிய நிலையில்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் டெல்லி பயணம்
சென்னை: தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஆளுநர் ஆர்என் ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். தமிழக ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது.

நீட் விலக்கு மசோதா
பாஜக தவிர அனைத்து கட்சிகளுடன் ஆதரவுடன் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட்டது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர்
இதற்கிடையே நேற்று தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை சபாநாயகருக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது அல்ல என்று ஆளுநர் மாளிகை அதில் குறிப்பிட்டுளள்து. தமிழக ஆளுநர் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் அவரை மத்திய அரசு திரும்ப அழைத்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

திடீர் டெல்லி பயணம்
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. வருகிற 6-ம் தேதி டெல்லி செல்லும் ஆர்என் ரவி 9-ம் தேதி தமிழகம் திரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபோக இந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.

யாரை சந்திக்க போகிறார்?
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதுவும் 3 நாள் டெல்லியில் இருப்பதால் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் பேச சென்றுள்ளாரா? பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications