மதுரை எய்ம்ஸ் கட்டுமானம்.. சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கிய தமிழக அரசு! கட்டுமானம் எப்போது முடியும்?
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்குத் தமிழ்நாடு அரசு இப்போது சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கடந்த 2015இல் மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டு இடமும் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் பிரதமர் மோடி, அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை எய்மஸ்: தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. பணிகள் விரைந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது.. அதன் பிறகு பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இது அடுத்து நடந்த தேர்தல்களிலும் பேசுபொருள் ஆனது.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்.. 5 ஆண்டுக்கு பிறகு வேகமெடுக்கும் வேலை.. 2026ல் திறக்க முடிவு
இதற்கிடையே நீண்ட தாமதத்திற்குப் பிறகு 2023 ஆகஸ்ட் 17 மாதம் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. எல் அன்ட் டி நிறுவனம் இதற்கான டெண்டரை எடுத்தது. இருப்பினும், கட்டுமான பணிகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதியைக் கிடைக்காததால் கட்டுமானம் உடனடியாக தொடங்கப்படவில்லை. இதற்கிடையே எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி கடந்த மே 2ஆம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் விண்ணப்பித்தது.

அனுமதி: இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்த வல்லுநர் குழு சுற்றுச்சூழல் துறையிடம் அளித்த ஆய்வறிக்கையில் அடிப்படையில் அனுமதி தரலாம் என்று கடந்த மே 10ஆம் தேதி பரிந்துரை அளித்தது. மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது சுற்றுச்சூழல் அனுமதியைத் தமிழக அரசு வழங்கி உள்ளது. இருப்பினும், கட்டுமானத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளை மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் பகுதியில் மண்ணை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்போது சுற்றுச்சுழல் அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், விறுவிறுவென கட்டுமான பணிகள் தொடங்கும் எனத் தெரிகிறது. 33 மாதங்களில் இந்த கட்டுமானம் முடிக்கப்படும் என எய்ம்ஸ் தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications