மகளிர் உரிமை தொகை திட்டம் ரூ.1000.. புதிய பயனாளிகளுக்கு எப்போது பணம் வரும்? வெளியான தகவல்
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விரிவாக்கத்திற்கான முதல் கட்ட பணிகள் நடப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் இனி விண்ணப்பம் செய்பவர்களுக்கு எப்போது தொகை வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விரிவாக்கத்தின்படி கூடுதல் பயனாளிகள் இந்த மாதம் இறுதியில் சேர்க்கப்பட உள்ளனர். அதாவது இன்னும் 7-10 நாட்களில் விரிவாக்கம் தொடர்பான பணிகள் தொடங்கும். அதன்பின் பணிகள் முடிந்து அடுத்த மாதம் புதிய பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள். அவர்களுக்கான ஓடிபி சோதனைகள் நடக்கும்.

எல்லாம் முடிந்த பின் ஆகஸ்ட் 15ம் தேதி அவர்களுக்கு தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசு தந்த வீடுகளிலும் வசிப்பவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது அரசின் திட்டங்களின் கீழ் வீடுகளை பெற்ற பலரும் இந்த திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். அரசு வீடுகளில் இருப்பவர்கள், அது அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பாக இல்லாத பட்சத்தில், அவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கத்தில் இந்த முறை புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த முறை விரிவாக்கத்தின் போது புதிதாக ரேஷன் கார்டு பெற்ற பலருக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ரூ.1000 பணம் பெறுவதற்காக இவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெறுகிறார்கள் என்று கூறி அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான அடுத்த கட்ட பயனாளிகள் சேர்ப்பு ஜூன் 4ம் தேதி நடக்க இருந்தது . ஆனால் அப்போது தொடங்கப்படவில்லை. விரைவில் தமிழ்நாடு முழுக்க இதற்காக கேம்புகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 9000 இடங்களில் இதற்காக கேம்புகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 25 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி கூடுதலாக 10 - 15 லட்சம் பேர் வரை இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட உள்ளனர். அதன்படி இந்த பயனாளிகள் எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது.
தளர்வுகள் வருகிறது
மகளிர் உரிமை தொகை திட்டம் ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்படும் போது அதில் கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை மனதில் வைத்து முக்கியமான பல தளர்வுகள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
மகளிர் உரிமை தொகை திட்டம்
இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவலி அல்லாதவர்களுக்கு பணம் கிடைக்கும். ஒரு வீட்டில் அப்பா, 2 மகன், 3 மகள் இருக்கிறார்கள். யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அம்மா உயிரோடு இல்லை என்றால் வீட்டில் உள்ள 21 வயது நிரம்பிய முதல் பெண்ணுக்கு பணம் தரப்படும். அவர் குடும்ப தலைவி இல்லையென்றாலும் மகளிர் உரிமை தொகை மூலம் பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அவர்கள் தகுதியானவராக இருந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் மீண்டும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விவாகரத்து பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். அவர்கள் தனி ரேஷன் கார்டு பெற்றுள்ள நிலையில் கண்டிப்பாக மகளிர் உரிமை தொகை கிடைக்கும்.
கடந்த முறை சில ஆவணங்கள் சரியாக இல்லாத பெண்களுக்கும் பணம் வழங்கப்படவில்லை, அரசின் வேறு நிதிகளை வங்கியில் பெற கூடிய பெண்களுக்கு இந்த திட்டத்தில் இப்போது என்று இல்லாமல் எதிர்காலத்திலும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்கிறார்கள்,.
மாறாக ஆவணங்கள் சரியில்லாத பெண்கள், இனி திருமணம் ஆகி குடும்ப தலைவி ஆகும் பெண்கள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம். அடுத்த சில நாட்களுக்கு பின் திட்டத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். அப்போது விடுபட்டவர்கள் விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இதற்காக ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் பணம் தரப்பட்டது. மாறாக விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படும். தகுதி இல்லாதவர்களுக்கு பணம் வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications