ஆஸ்பத்திரிகளில் ஒரு பக்கம் கொள்ளை.. மறுபக்கம் தாக்குதல்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரண்டு வார்னிங்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கொரோனா பேரிடர் சூழலை தவறாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீதும் -தன்னலம் கருதாமல் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மீதும் -நோயாளிகள் இறக்க நேரிடும்போது தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
Recommended Video
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கொரனாத் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் அல்லும் பகலும் அயராது தம்முயிரை துச்சமென மதித்து அரும்பணி ஆற்றி வருகின்றனர்.
அரசுத் துறையிலும் , தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றி வரும் அனைவருடனும், தமிழக அரசு தோளோடு தோள் நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

நிவாரணம்
இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையும் , பணிபுரிந்து வரும் அவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் மீது தாக்குதல்
இந்த நிலையில் சில நோயாளிகளின் உயிர் இழக்க நேரிடும் போது தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது. மருத்துவமனைகளில் உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க இயலாததாகிறது. இச்சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனை பணியாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது, அவர்கள் ஆட்சி வரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காப்பீட்டு பயனாளிகள்
மேற்கூறியவாறு மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவப் பணியாளர்களும் பெரும் சேவை செய்து வரும் நிலையில், சில மருத்துவமனைகளில் பேரிடர் சூழலை தவறாக பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காமல் அவரிடம் கட்டணம் கேட்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளன.

தமிழக அரசு தயங்காது
மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்களின் நற்பணி தொடர்ந்திட உறுதுணையாக இருக்க கூடிய அதே நேரத்தில் , பெருமக்களிடம் அதிக கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும், நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது. தமிழ்நாடு மருத்து நிறுவனங்கள் ( முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி , இந்த மருத்துவமனைகளில் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தெரிவித்துக்கொள்கிறேன் " இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications