தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல.. பட்ஜெட்டில் உண்மையை போட்டுடைத்த பி.டி.ஆர்.. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின்போது கூறி இருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தங்களது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில் பட்ஜெட்டில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் பி.டி.ஆர்
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது என்று கூறி வந்தனர். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்பது உண்மைக்கு மாறானதாகும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
மின்சாரத்துறைக்கு கூடுதலாக ரூ.19872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின்னுற்பத்தி நிலையங்களின் வாயிலாக மாநிலத்தில் 17 ஆயிரத்து 970 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். வேளாண் இலவச மின்சாரம், வீட்டிற்கான மின்சாரத்திற்கான மானியத்திற்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அப்போது மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி ஆகியோர் தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கூறி வந்த நிலையில் தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இருக்கிறது என்று தற்போது பி.டி.ஆர் கூறி இருப்பது சமுக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.












Click it and Unblock the Notifications