இந்தியாவிலேயே நம்பர் 1.. அடித்து தூக்கிய தமிழ்நாடு.. அண்ணாந்து பார்க்கும் குஜராத், உ.பி, கர்நாடகா!
சென்னை: உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவல், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
2023-24 நிதியாண்டிற்கான தொழிற்சாலைகள் குறித்த ஆய்வறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 15% ஆகும். இது மற்ற பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பது, மாநிலத்தின் வலுவான தொழில்துறை அடித்தளத்தையும், முதலீடுகளை ஈர்க்கும் திறனையும் எடுத்துக்காட்டுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தித் துறையில் தமிழ்நாடு நம்பர் 1
உற்பத்தித் துறையில் நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் குஜராத் 13% வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது. உற்பத்தித் துறையில் நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் மகாராஷ்டிரா 13% வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது. உற்பத்தித் துறையில் நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் உத்தர பிரதேசம் 8% வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது. உற்பத்தித் துறையில் நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் கர்நாடகா 6% வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது.
இந்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான தொழில்துறை ஆய்வறிக்கை இன்று வெளியானது. இந்த ஆய்வின்படி, தமிழ்நாடானது தொழில்துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலுள்ள மொத்தத் தொழிற்சாலைப் பணியாளர்களில் 15.24% பேர் தமிழ்நாட்டிலிருந்துள்ளனர்.
தமிழ்நாடு நம்பர் 1
இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5-6% மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு, இந்தியாவின் ஒவ்வொரு ஆறு தொழிற்சாலைப் பணியாளர்களில் ஒருவரை வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது. அத்துடன், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளையும் தமிழ்நாடு பெற்றுள்ளது. மொத்தமுள்ள 40,100 தொழிற்சாலைகள், தேசியப் பங்கில் 15.43% ஆகும்.
இந்தத் தரவுகள், எதிர்க்கட்சிகள் பரப்பும் அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்களுக்கும், ஒரு சிலரின் கேள்விகளுக்கும் வலுவான பதிலடி தருகின்றன. இவை தமிழக அரசின் தரவுகள் அல்ல, மாறாக இந்திய அரசு வெளியிட்ட தரவுகள்.
தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்
இது தொடர்பாக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா செய்துள்ள போஸ்டில், தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ், தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு உற்பத்தித் துறை தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.
தொழில்துறை மேம்பாட்டுத் துறை, தமிழ்நாட்டுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. மற்ற மாநிலங்கள் முதலீட்டு எண்களில் கவனம் செலுத்தும் நிலையில், திராவிட மாடல் தமிழக அரசு வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
தமிழ்நாடு இந்தியாவின் 'திறன் தலைநகரமாகவும்' மற்றும் 'உற்பத்தித் தலைநகரமாகவும்' தொடர்ந்து திகழ்கிறது. தற்போது வந்துள்ள முதலீடுகளைக் கருத்தில் கொள்ளும்போது, தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையின் எதிர்காலம் முன்னெப்போதையும் விடப் பிரகாசமாக உள்ளது என்று தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பது, மாநிலத்தின் வலுவான தொழில்துறை அடித்தளத்தையும், முதலீடுகளை ஈர்க்கும் திறனையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.












Click it and Unblock the Notifications