அரசியல் கூட்டங்களுக்கு 5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி! புதிதாக நெறிமுறைகளை உருவாக்கியது தமிழக அரசு
சென்னை: அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ரோடு உள்ளிட்ட பிரச்சாரங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதில் புதிதாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்படும். கூட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வைப்புத் தொகை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதியளிக்கப்படும். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் என அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

இதில் மேலும் சில ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசியல் கூட்டங்களில் 5,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ. 1 லட்சம் வரையும், 10,000 முதல் 20,000 பேர் வரை கலந்து கொள்ளும் ளும் கூட்டம் என்றால் ரூ.3 லட்சம், 20,000 முதல் 50,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.8 லட்சம், 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் கூட்டம் என்றால் ரூ.20 லட்சம் என வைப்புத்தொகை வசூலிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ரோடு-ஷோவுக்கான நிபந்தனைகளை பொறுத்தவரை, பேச்சாளருக்கு 500 அடி தூரம் முன்புவரை தடுப்பு; தடுப்புகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அமைக்க வேண்டும். போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும்; பேச்சாளரை மக்கள் பின் தொடர்வதை தடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும். ரோடு-ஷோ செல்லும் வழியில் வேறு எங்கு உரை நிகழ்த்தக் கூடாது என்றும் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications