இன்று முதல் 5 நாட்களுக்கு ‘அலெர்ட்’.. இடி மின்னலுடன் மழை கொட்டும் என வானிலை மையம் தகவல்!
சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 6ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மக்கள் பகல் நேரங்களில் வெளியே தலைகாட்ட முடியாமல் அவதியடைந்தனர். கத்தரி வெயில் முடிந்துவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் கடந்த ஓரிரு நாட்களாக சற்று குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் ஜூன் 4ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூன் 4ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இயல்பை விட வெப்பம் 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications