ED சோதனைக்கு நடுவே.. திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்.. ஒரே பரபரப்பு
சென்னை: அமைச்சர் துரைமுருகன் இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார். வேலூரில் மகன் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இன்று கதிர் ஆனந்துக்குசொந்தமான கல்லூரியில் சோதனை நடந்தது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் இல்லத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக வந்தனர். ஆனால் வீட்டில் பணியாட்கள் இருவர் மட்டுமே இருந்ததால், சுமார் 7 மணி நேரமாக வீட்டு வாசலில் சோதனை செய்வதற்காக காத்திருந்தனர்.

பின்னர் வெளிநாட்டில் இருந்தபடி தன் வீட்டில் உறவினர் இருவர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர் ஆனந்த் மின்னஞ்சல் மூலமாக அனுமதி அளித்தார். இதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தினர். இதேபோல் அவருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் இந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை முடிந்து சென்றனர்.
ஆனால் வீட்டில் இருந்து ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. தொடர்ந்து இன்றும் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 2 வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றவில்லை என்று கூறினார்.
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சரின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். எதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார் என்பது பற்றிய தகவல் தெரியவரவில்லை.
முன்னதாக வேலூரில் உள்ள மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருப்பது பற்றி அறிந்ததும், சென்னையில் இருந்த அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினை துரைமுருகன் நேரில் சந்தித்து பேசினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications