Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ED சோதனைக்கு நடுவே.. திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற அமைச்சர் துரைமுருகன்.. ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் துரைமுருகன் இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார். வேலூரில் மகன் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இன்று கதிர் ஆனந்துக்குசொந்தமான கல்லூரியில் சோதனை நடந்தது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் இல்லத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக வந்தனர். ஆனால் வீட்டில் பணியாட்கள் இருவர் மட்டுமே இருந்ததால், சுமார் 7 மணி நேரமாக வீட்டு வாசலில் சோதனை செய்வதற்காக காத்திருந்தனர்.

minister durai murugan delhi ed raid

பின்னர் வெளிநாட்டில் இருந்தபடி தன் வீட்டில் உறவினர் இருவர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர் ஆனந்த் மின்னஞ்சல் மூலமாக அனுமதி அளித்தார். இதன்பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தினர். இதேபோல் அவருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் இந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை முடிந்து சென்றனர்.

ஆனால் வீட்டில் இருந்து ஏதேனும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. தொடர்ந்து இன்றும் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் 2 வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றவில்லை என்று கூறினார்.

திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சரின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். எதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார் என்பது பற்றிய தகவல் தெரியவரவில்லை.

முன்னதாக வேலூரில் உள்ள மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்திருப்பது பற்றி அறிந்ததும், சென்னையில் இருந்த அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினை துரைமுருகன் நேரில் சந்தித்து பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+