Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

+2 Exam: இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு.. தமிழ்நாடு முழுக்க 8.27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் நடப்பு 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்​கு​கிறது. தமிழகம் முழுவதும் 3,412 மையங்​களில் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள், 27,783 தனித் தேர்​வர்​கள், 281 கைதி​கள் என மொத்​தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதுகின்​றனர். சென்னை மாவட்​டத்​தில் 250 மையங்​களில் 67,516 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்​றனர்.

TN HSC Public Examination

பிளஸ் 2 பொதுத் தேர்வு

முதல் நாளான இன்று தமிழ் மற்​றும் இதர மொழித்​தாள் தேர்​வு​கள் நடை​பெறுகின்​றன. +2 பொதுத் தேர்வு காலை 10.00 மணிக்கு தொடங்கி மதி​யம் 1.15 மணிக்கு முடிவடை​யும். வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை தேர்​வு​கள் நடை​பெறும். கண்​காணிப்பு பணி​யில் 44,624 ஆசிரியர்​கள் ஈடு​படு​கின்​றனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான முழுமையான ஏற்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை செய்து முடித்துள்ளது. தேர்வர்கள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பறக்கும் படைகள்

காப்பி அடித்​தல், பிட் அடித்​தல் போன்ற முறை​கேடு​கள் நடக்​காமல் தடுக்க, 4,540 பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​வுக் கூடத்​துக்​குள் செல்​போன், மின்​சாதனப் பொருட்​களை கொண்​டு ​செல்ல தடை விதிக்​கப்​பட்டுள்​ளது.

ஆள்​மாறாட்​டம், காப்பி அடித்​தல் போன்ற ஒழுங்​கீன செயல்​களில் மாணவர்​கள் ஈடு​பட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று எச்​சரிக்​கப்​பட்​டுள்​ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "உயர் கல்வியே எங்கள் இலக்கு என்ற உறுதியோடு ஆண்டு முழுவதும் ஊக்கத்தோடு படித்து, உங்கள் குறிக்கோளின் நுழைவுவாயிலான மேல்நிலை பொதுத் தேர்வை எழுத உள்ளீர்கள். கருத்தாய் படித்து கல்விக் கடமையாற்றி அதன் பலன் கனியும் காலமிது. ''என்னால் முடியும்'' என்னும் மந்திரச் சொல்லை மனதில் பதியுங்கள். அறிவில் தெளிவும், மனதில் துணிவும், செயலில் உறுதியும் இருந்தால் தேர்வு பற்றிய அச்சம் தேவைஇல்லை. தேர்வுகளை முனைப்புடன், முழு கவனத்துடன் எழுதுங்கள்.

இந்த காலத்தில் உங்கள் உடல்நலன், மனநலனும் மிக அவசியம். சத்தான உணவு, போதுமான தூக்கம், மன அமைதி ஆகியவை தேர்வுகளை எதிர்கொள்ளத் துணைநிற்கும். பதற்றமின்றி, நம்பிக்கை, மகிழ்ச்சியோடு தேர்வை அணுகுங்கள். உழைப்புக்கு ஏற்ற பலனை நிச்சயம் அடைவீர்கள்.

உங்கள் உயர் கல்வி இலக்கை அடைய, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மனவலிமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வெற்றிப் பாதைக்கான படிக்கட்டுகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். அனைவரும் சிறப்பான வெற்றி பெற என் உளப்பூர்வமான வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார்.

வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மாணவர்கள் பயமோ, பதற்றமோ இன்றி நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு செல்லுங்கள். தேர்வில் தேர்ச்சி அல்லது அதிக மதிப்பெண் பெற முடியாவிட்டால் முடங்கிவிடாதீர்கள். அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை, மன உறுதியுடன் இருங்கள்." எனக் கூறியுள்ளார்.

அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்று, சாதனை படைக்க விரும்புகிறேன். மாணவர்கள் பதற்றம், பரபரப்பு இல்லாமல் கவனமாக படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+