அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த போலீசார்.. பாஜக தலைவர் ஜேபி நட்டா கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
சென்னை: சென்னையில் வருகிற 11 ஆம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொள்வார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் இந்த முறை கணிசமான இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதால் பாஜக தனது தலைமையில் தனி கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக டிடிவி தினகரனின் அமமுக, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமக, மற்றும் தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாத யாத்திரை 200 சட்டமன்ற தொகுதியை நிறைவு செய்ததின் அடையாளமாக பாஜக சார்பாக சென்னையில் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல சென்னையில் வருகிற 11 ஆம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொள்வார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தனம் ஆகிய 3 இடங்களில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
ஆனால், இங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பாஜக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. செயின் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.











Click it and Unblock the Notifications