தமிழ்நாட்டில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. 43,051 இடங்களில் முகாம் அமைப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. இதையடுத்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று தவறாமல் சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமில் சொட்டு மருந்து போடப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சொட்டு மருந்து முகாமை சென்னை தேனாம்பேட்டையில் துவங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு முழுக்க இன்று பள்ளிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பால்பவாடிகள், அங்கன்வாடிகள், பொது இடங்களில் சொட்டு மருந்து போடப்பட உள்ளது. மலை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மொத்தமாக 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று சொட்டு மருந்து போடும் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு முறையும் சொட்டு மருந்து முகாம்களில் 40-50 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயம் செய்யப்படும்.
அதன்படி இந்த முறை 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எப்போதும் போல இந்த முறையும் சொட்டு மருந்து போட்ட குழந்தைகளுக்கு விரலில் மை அடையாளத்திற்காக வைக்கப்படும்.
ஆனால் கொரோனா காரணமாக இந்த முறை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா இருக்கும் குழந்தைகளுக்கு இந்த முறை சொட்டு மருந்து போடப்பட்டது. அதேபோல் கொரோனா அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சனை இருக்கும் பட்சத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படாது. காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறவுள்ளது. மக்கள் எல்லோரும் தங்கள் குழந்தைகளை சொட்டு மருந்து கொடுக்க அழைத்து வர வேண்டும். போலியோவை தொடர்ந்து மக்கள் கட்டுப்படுத்த வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications