Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போடு தகிட தகிட.. பொங்கல் பரிசுதொகுப்புடன் 3 ஆயிரமா? 5 ஆயிரமா? அறிவிப்பை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று அல்லது நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையுடன் 'ரொக்க பரிசு' வழங்குவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அரசு பரிசுத் தொகுப்பை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரசு பொருட்கள் வழங்குவது வழக்கம். இந்த வருடம் பணத்தொகையும் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. சில தகவல்களின்படி, இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3000 முதல் ரூ.5000 வரை பொங்கல் பரிசு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tamil Nadu Government Pongal Gift Ration Card

பொங்கல் பரிசுத் திட்டம்

இதற்கான நிதி ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை பணிகளை தொடங்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசாக பணமும், பொருட்களும் சேர்த்து வழங்கப்பட்டது. கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றுடன் ரூ.500 ரொக்கப் பணமும் கொடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

3000-5000 ரொக்கம்

தற்போதைய திமுக ஆட்சியில் பணத் தொகை வழங்கப்படாதது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்திருத்து வருகின்றனர். இந்த அதிருப்தியை சமாளிக்கவும், தேர்தலை முன்னிட்டும் மக்களுக்கு பெரிய அளவில் நிவாரணத் திட்டம் வழங்கவும், இந்த ஆண்டு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ரூ.3000 வழங்கப்படும் வாய்ப்பே அதிகம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் சொல்கின்றன. தமிழகத்தில் சுமார் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகை

இதற்கு தேவையான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்குவது குறித்த அறிவுறுத்தலையும் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ரொக்க பரிசு வழங்கப்படுமா? அது எவ்வளவாக இருக்கும்? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எதிரி வரும் நிலையில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அதாவது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையுடன் ரொக்கம் பணம் வழங்கப்படுவது உறுதி எனவே தலைமைச் செயலக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பை புத்தாண்டு பரிசாக இன்று அல்லது நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் நிறைவடைந்து விட்டதாகவும், பொங்கல் பண்டிகைக்காக மட்டுமல்லாது, தேர்தலை கருத்தில் கொண்டும் குறிப்பிட்ட அளவிலான பொங்கல் ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும் சொல்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+