Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலை கொண்டாட ரெடியா? நாளை கைக்கு வரும் ரூ.3,000 ரொக்கம்! டோக்கனை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசையும் வழங்க அரசு அறிவித்த நிலையில், இந்த பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. டோக்கன்களை இன்றுக்குள் கொடுத்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நாளை ஜனவரி 8) பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை, தொகுப்பு, வேட்டி சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக ரூ.3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

TN govt Pongal Gift mk stalin

கடந்த சில நாட்களுக்கு முன் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் அறிவித்த மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தை நாளை (ஜனவரி 8) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பொங்கல் பண்டிகை

ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல் கட்டமாக இந்தப் பொங்கல் பரிசை வழங்குகிறார். அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த பரிசுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்துக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைகள் இருப்பதால், இந்த அளவிற்கு பெரிய அளவில் பரிசுத் தொகுப்புகளை தயாரித்து வழங்குவது பெரிய பணியாக் உள்ளது. இருப்பினும் அரசு முன்னதாகவே திட்டமிட்டு அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பொங்கல் ரொக்கப்பரிசு

அதோடு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. ரொக்கப் பரிசு சேர்த்துக் கொண்டால் இந்த திட்டத்திற்காக ரூ.6,900 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என்பதற்காக முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக இந்த டோக்கன் விநியோகம் நடைபெற்று வந்தது.

டோக்கன்

இன்று (ஜனவரி 7) க்குள் டோக்கன் வழங்கும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. டோக்கனில் எப்போது வர வேண்டும், எந்த நேரத்தில் வர வேண்டும் என்பதெல்லாம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால் மக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகம் துவங்குவதால் ரேஷன் கடைகள் 9, 10, 11ஆம் தேதிகளிலும் முழு நாளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஒரு நாளுக்கு 200 முதல் 300 குடும்பங்களுக்கு சீரான முறையில் பரிசுகள் வழங்கும்படி அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சர்க்கரை, அரிசி போன்ற பொருட்கள் முன்பே கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கரும்பும் இன்று முழுதாக அனைத்து கடைகளுக்கும் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள் தங்கள் பகுதிகளில் திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். அதன் பிறகு ரேஷன் கடைகள் முழுவதிலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளது.. இதோடு வேட்டி சேலையும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+