"பிரிச்சி போடு".. ரேஷனில் வந்தது மாற்றம்.. வெறும் 2 நிமிஷம்தான்.. ரேஷன் அட்டைதாரர்கள் செம மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இரட்டை ரசீது போடும் முறையில் மக்கள் காத்திருப்பு நேரத்தை தவிர்க்க, புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தமிழக அரசு, ரேஷன்கார்டுதாரர்களின் நலனுக்காகவே, நிறைய அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் செய்து வருகிறது.. பணபரிவர்த்தனையையும் எளிமைப்படுத்தி வருகிறது. ரேஷன்தாரர்களின் சுமையையும் குறைத்து வருகிறது.

tamil nadu ration shops starts double receipt system and ration card holders are happy

அதில் ஒன்றுதான், 2 ரசீது போடும் முறையாகும்.. தமிழக ரேஷன் கடைகளில் இந்த புதிய நடைமுறையானது, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன..

ரேஷன் கார்டு: மத்திய அரசின் இலவச அரிசிக்கு தனி ரசீதும், தமிழக அரசு அரசு வழங்கும் பொருட்களுக்கு தனி ரசீதும் வழங்கப்படுகின்றன. அதாவது, ரேஷன் கடைகளில் முன்னுரிமை (பிஎச்எச்) மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட (ஏஏஒய்) ரேஷன் அட்டைகளுக்கு 2 ரசீது போடும் முறை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், 2 வகையான ரசீதுகள் போடுவதால் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.. குறிப்பாக, முன்னுரிமை (பிஎச்எச்) மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா (ஏஏஓய்) ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யும்போது அரிசிக்கு மட்டும் முதல் ரசீதை மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 2-வது ரசீதை மாநில அரசு ஒதுக்கீட்டிலும் என்று பிரித்து 2 முறை பிஓஎஸ் இயந்திரத்தில் ரசீதுகளை பதிவு செய்ய நேரிடுகிறது. இதனால், ரசீது போடுவதற்கு காலதாமதம் ஏற்படுகின்றன..

காலதாமதம்: இந்த காலதாமதத்தினால், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.. பெரும்பாலும் இந்த முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்கள் முதியவர்கள்தான். இவர்களிடம் ஒரு முறை கைரேகை பெற்று ரசீது போடுவது, அதைவிட சிரமமான காரியமாக இருந்தது.

எனவே, இரட்டை ரசீது போடும் முறையில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என்றும், 2 முறை ரசீது போடும் முறையை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.
பிஎஸ்ஓ: இதையடுத்து, புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.. அதன்படி, பிஓஎஸ் இயந்திரத்தில் புதிய அப்டேட்டை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.. இந்த புதிய மாற்றத்தினால், பிஓஎஸ் இயந்திரத்தில் இரட்டை ரசீது போடும்போது ஏற்பட்ட 5 நிமிட காலதாமதமானது, இப்போது 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுவிட்டதாம்..

2 நிமிடம்: ஆனால், இந்த 2 நிமிட காலதாமதமும் ஏற்படாத வகையில், பிஓஎஸ் இயந்திரத்தில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், முதல் ரசீது போட்டவுடனேயே 2-வது ரசீதை போடும் வாய்ப்பு நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது... ஆக, 2 நிமிடங்களில் இரண்டு 2 ரசீதுகளும் வழங்கும் வகையில், மென்பொருள் திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளது, ரேஷன் அட்டைதாரர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+