வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி!
சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாடுகளை இன்னும் வேகப்படுத்தவும், திட்டப்பணிகளில் நிலவும் தேக்க நிலையைச் சரி செய்யவும் ஒரு முக்கியமான நிர்வாகச் சீர்திருத்தத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை வெவ்வேறு பிரிவுகளாகச் சிதறிக்கிடந்த நெடுஞ்சாலைத் துறையின் நான்கு முக்கியப் பிரிவுகள் இனி நான்கு பிராந்திய மண்டலங்களாக (Regional Zones) மாற்றப்படுகின்றன.
என்ன மாற்றம்?
தற்போதுள்ள கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள், திட்டங்கள் மற்றும் சென்னை சிட்டி சாலைகள் ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இனி இவை அனைத்தும் கீழ்க்கண்ட நான்கு தலைமைப் பொறியாளர்களின் நேரடிச் செயல்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகின்றன:
சென்னை மண்டலம்
திருச்சி மண்டலம்
மதுரை மண்டலம்
கோவை மண்டலம்
ஏன் இந்த அதிரடி?
ஒரே இடத்தில் சாலைப் பணிகள் நடந்தாலும், ஒரு பிரிவு பாலத்தையும் மற்றொரு பிரிவு சாலையையும் கவனிக்கும்போது ஒருங்கிணைப்புப் பணிகள் (Coordination) பெரும் சவாலாக இருந்தன. இதனால் கோப்புகள் நகர்வதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் எனத் திட்டங்கள் இழுபறியாகின.

இனி அந்தந்த மண்டல தலைமைப் பொறியாளர்களே அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பேற்பார்கள் என்பதால், முடிவுகள் எடுப்பதில் வேகம் கூடும். மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் புறவழிச்சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் இனி 'ஜெட்' வேகத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ரீதியாகப் பார்க்கும்போது, இதுவரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாலைப் பணி நடந்தால் அதைப் பராமரிக்க ஒரு பிரிவும், அதே சாலையில் பாலம் கட்ட மற்றொரு பிரிவும் எனத் தனித்தனியாக இயங்கி வந்தன. இதனால் ஒரு திட்டத்தை முடிக்க பல துறைகளிடம் அனுமதி பெற வேண்டிய 'சிவப்பு நாடா' முறை (Red Tapism) நிலவியது.
இனி மண்டல வாரியான அதிகாரப் பரவலாக்கல் மூலம், அந்தந்த மண்டலத் தலைமைப் பொறியாளர்களே அனைத்துப் பிரிவுகளையும் ஒருங்கிணைக்கும் முழு அதிகாரத்தைப் பெறுவார்கள். இதன் மூலம் நிதி ஒதுக்கீடு கோருவது முதல் தொழில்நுட்ப அனுமதி வழங்குவது வரை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் நடக்கும். குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் தேவையைக் குறைத்து, மண்டல அளவிலேயே விரைவான முடிவுகளை எடுக்க இந்த மாற்றம் வழிவகுக்கும்.
திட்டச் செயலாக்கத்தில் (Project Implementation) ஏற்படும் தேக்க நிலையை உடைப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம். முன்பு வெவ்வேறு பிரிவுகள் இருந்ததால், ஒரு சாலைப் பணியின் போது மின்சாரம் அல்லது குடிநீர் வாரியங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் பெரும் குழப்பம் நிலவியது.
இனி ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்குட்பட்ட அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் வருவதால், மற்ற அரசுத் துறைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளைத் தொடங்குவது எளிதாகும். இது ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை வழங்குவதில் உள்ள சிக்கல்களைக் குறைப்பதுடன், 'ஒரே தளம் - ஒரே தீர்வு' என்ற அடிப்படையில் களப்பணியாளர்களின் பணிச்சுமையையும் சீராக்கும். இதனால் தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்பு வசதிகள் உலகத் தரத்திற்கு மிக விரைவில் மேம்படுத்தப்படும்.
எப்போது அமல்?
இந்த புதிய நிர்வாக நடைமுறை வரும் ஜூன் 15, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது. அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் மண்டல ரீதியான பணி ஒதுக்கீடுகள் தற்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நிர்வாக ரீதியாகப் பிரித்தது சரி... ஆனால், தரமான சாலைகளும் குறித்த காலத்திற்குள் திட்டங்களை முடிப்பதும் தான் இந்த மாற்றத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்!
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications