நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓமன் கடல் பகுதியில் கப்பலில் பணியாற்றியபோது உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமியின் உடல், சுமார் மூன்று நாட்கள் கப்பலிலேயே வைக்கப்பட்டு இருந்தது சர்ச்சைக்குள்ளானது. இதற்கிடையே அவரது உடல் இப்போது கப்பலில் இருந்து இறக்கப்பட்டு ஓமனில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. அமெரிக்கா ஈரான் போர் காரணமாக ஒட்டுமொத்த வளைகுடாவும் பற்றி எரிந்து வந்தது. இதனால் இரு நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக வளைகுடாவில் இருக்கும் இந்திய மாலுமிகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி தான் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

Indian sailor death incident on Oman ship

உயிரிழந்த தமிழர்

அதாவது தமிழகத்தைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்தநாதன் என்பவர் எம்.டி செலேஸ்டியல் சீ (MT Celestial Sea) என்ற கப்பலில் இரண்டாவது அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் 11ஆம் தேதி இந்த கப்பல் ஓமன் கடல் பகுதியில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, நிஷாந்த் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். பொதுவாக இதுபோல கப்பலில் யாராவது உயிரிழந்தால் அவர்கள் உடல் உடனடியாக அருகே இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும்.

ஆனால், போர் உள்ளிட்ட நிர்வாகக் காரணங்களால், அவரது உடல் கடந்த மூன்று நாட்களாகக் கப்பலிலேயே வைக்கப்பட்டிருந்தது. இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. இப்போது ஓமன் நாட்டின் துக்கம் (Duqm) துறைமுகத்தில் நிஷாந்தின் உடல் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம், ஓமன் அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. நிஷாந்தின் உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நிஷாந்தின் குடும்பத்தினர் உடனும் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். இருப்பினும், நிஷாந்த் ஏன் உயிரிழந்தார்.. அவரது உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த மருத்துவக் காரணங்கள் குறித்து இன்னும் விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கவலை

மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலை காரணமாக, இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து தற்போது பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட ஓமன் கடற்கரை அருகே எம்.டி செட்டபெல்லோ என்ற கப்பல் தாக்கப்பட்டதில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மோதல்கள் நிலவும் அபாயகரமான பகுதிகளுக்கு இந்திய மாலுமிகளை அனுப்ப வேண்டாம் என்று வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்திய மாலுமிகள்

இந்த சூழலில் தான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்திய மாலுமிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதன் மூலம் உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கத் தாக்குதலில் நான்கு இந்திய மாலுமிகள் உயிரிழந்திருந்த நிலையில், அந்த குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாலுமிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+