தமிழக மாணவர்களே குட்நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதிக்கு பதிலாக 9ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கிய நிலையில் தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. இதனிடையே 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் 1-3ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 23 - அக்டோபர் 2ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், 4 முதல்-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.28 - அக்.2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை முதலில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் 2 கட்டங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக அக்டோபர் 6ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் காலாண்டு விடுமுறை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதிக்கு பதிலாக 9ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 6 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications