Tamil nadu schools reopen: காலாண்டு தேர்வு முடிஞ்சது! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து அக்டோபர் 6ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. விஜயதசமி நாளில் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த 15 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் நடந்த நிலையில் அவை நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu schools quarterly exam

இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மாணவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, கல்வி முறையில் சமநிலையை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பெற்றோர்களும், மாணவர்களும் விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.

தனியார் பள்ளிகள் இந்த சுற்றறிக்கையை பின்பற்றி, கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. அது போல் இந்த விடுமுறை நாட்களில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியும் வந்துவிடுகிறது.

மேலும் தீபாவளி பண்டிகை 20,21 ஆகிய தேதிகளில் வருகிறது. ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதால் மாணவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். இது போதாகுறைக்கு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த மழையால் மாவட்ட வாரியாக மழையின் தீவிரத்தை வைத்தும் விடுமுறை கிடைக்கும். அப்படியே அரையாண்டு முழுவாண்டு தேர்வும் அடுத்தடுத்து வந்து விடுமுறை கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+