Tamil nadu schools reopen: காலாண்டு தேர்வு முடிஞ்சது! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?
சென்னை: தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து அக்டோபர் 6ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. விஜயதசமி நாளில் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த 15 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் நடந்த நிலையில் அவை நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மாணவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, கல்வி முறையில் சமநிலையை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பெற்றோர்களும், மாணவர்களும் விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தனியார் பள்ளிகள் இந்த சுற்றறிக்கையை பின்பற்றி, கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. அது போல் இந்த விடுமுறை நாட்களில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியும் வந்துவிடுகிறது.
மேலும் தீபாவளி பண்டிகை 20,21 ஆகிய தேதிகளில் வருகிறது. ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதால் மாணவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். இது போதாகுறைக்கு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த மழையால் மாவட்ட வாரியாக மழையின் தீவிரத்தை வைத்தும் விடுமுறை கிடைக்கும். அப்படியே அரையாண்டு முழுவாண்டு தேர்வும் அடுத்தடுத்து வந்து விடுமுறை கிடைக்கும்.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications