வெற்றி.. கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் மியூசியம்.. கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி!
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் மியூசியம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடியில் பேனா நினைவிடம் அமைக்க ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இது ஒருபுறம் இருக்க சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் ரூ.80 லட்சத்தில் பிரமாண்டமாக அருங்காட்சியகம்(மியூசியம்) அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7 ம் தேதி மரணமடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து கருணாநிதியின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு
அந்த வகையில் சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு (42 மீட்டர்) பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் சமீபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இது ஒருபுறம் இருக்க கடலில் பேனா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திலும் மீனவர்கள் மனு செய்துள்ளனர்.

கருணாநிதி நினைவிட பணி
இதேபோல் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைப் பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது.

ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம்
மேலும் கருணாநிதி நினைவிடத்திற்குள் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் என்பது பாதியளவு தரைக்குள்ளும், மீதி தரைக்குள் மேலும் அமைய உள்ளது. இந்த இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-IIன் கீழ் வருகிறது. இதனால் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.

அனுமதி
இந்நிலையில் தான் கருணாநிதி நினைவிடத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. முதலில் அண்ணா நினைவிட வளாகத்தை சுற்றிய பகுதியில் 40 சென்ட் நிலத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்பிறகு 160 சென்ட் நிலத்தில் நிரந்தரமாக அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தை அரசு வகுத்தது. இதனால் கட்டாயமாக அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் தான் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications