இனி புறம்போக்குனு சொல்ல வேண்டாம்.. வீடு தேடி வரும் பட்டா! ஸ்டாலின் அடித்த சிக்ஸர்..வெளியான அறிவிப்பு
சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பட்டா வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறது. இதன்மூலம் சுமார் 86 ஆயிரம் பேர் பட்டா பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக பட்டா பெற முடியாமல் இருந்த நிலையில் அந்த ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் "பெல்ட் ஏரியாக்களில்" ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
உரிய பயனாளிகளை கண்டறிந்த பட்டா வழங்கும் வகையில், 6 மாதங்களில் இதனைச் செய்து முடிக்க இரண்டு குழுக்களையும் தமிழக அரசு அமைக்கவுள்ளது. சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்ய முடியாமல் இருப்பது குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து நான்கு மாவட்டங்களில் இருக்கக் கூடிய பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்சனையிருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57,084 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அந்த உத்தரவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில், நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது . சென்னை பெருநகரப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும். மற்ற இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் . 3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications