இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஹிந்தி படிப்பதில் தமிழகம் முதலிடமா?
சென்னை: தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் உள்ள நிலையில், தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் உள்ள நபர்கள்தான் அதிக அளவில் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தி பயிலும் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை அலுவலல் மொழியாக அங்கீகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பள்ளிப் பருவத்தின் தொடக்கத்தில் இருந்தே குழந்தைகளுக்கு ஹிந்தி மொழியை கற்பிக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு காலம்காலமாக உள்ளது.

மேலும், புதிய தேசிய கல்வி திட்டத்தையும் தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால், மத்திய அரசு வழங்க வேண்டிய தமிழகத்துக்கான நிதிகூட இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 573 கோடி ரூபாய் இதுவரை கிடைக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே இந்தப் பணத்தை வழங்க முடியும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையைக் கொண்டிருக்கும் திட்டமான பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மாநில அரசை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவிப்பதாகவும், இதற்கும் அதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று தெரிவித்தார். மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டே அனைவருக்கும் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது.
மாணவர்களின் கல்வி விசயத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது. உடனடியாக பணத்தை விடுவிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள அழுத்தம் தரப்படுவதாகவும், மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிந்தி திணிப்பு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் சுயவிருப்பத்தோடு கற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், தமிழகத்தில் ஹிந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற மொத்தம் 8 தேர்வுகளை எழுத வேண்டும். இந்த தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை ஹிந்தி பிரச்சார சபா நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 4,73,650 பேர் தேர்வெழுதினர். தமிழகத்தில் இருந்து மட்டும் 3,54,655 பேர் தேர்வெழுதினர். ஆந்திராவில் இருந்து 1,04,959 பேரும், கர்நாடத்தில் இருந்து 5,584 பேரும், கேரளத்தில் இருந்து 8,452 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில், தென் மாநிலங்களில் இருந்து தேர்வு எழுதுவோரில் தமிழகம் முதலிடம் வகிப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் ஹிந்தி கற்க விரும்புவோரின் எண்ணிக்கையும் 5 சதவீதம் வரை உயர்ந்து வருவதாகவும் துறை வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications