வார இறுதி நாட்கள், சுப முகூர்த்தம், கோவில் திருவிழாக்கள்.. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை: வார இறுதி நாட்களில் வழக்கம் போல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இன்று 600 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி வருவதற்கான சிறப்பு ஏற்பாடாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வாரமும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் கூடுதல் பயணிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்வர் என்பது எதிர்பார்ப்பு.
இதனால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழக்கமான பேருந்துகளை விட கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் சென்னையில் இன்று பிற பகுதிகளுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்களில் மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications