தமிழகத்தில் 3 மணிநேரத்தில் மழை ஜமாய்க்கப்போகுது... 15 மாவட்ட மக்களே என்ஜாய்
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், கோவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே வெயில் சுட்டெரித்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவானது. மக்கள் புழுக்கத்தில் சிக்கித்தவித்தனர். அனல் காற்று வீசியதையும் தாண்டி ஆங்காங்கே சாரல் மழையும் பெய்தது.
வெப்பச்சலனத்தால் பல நகரங்களில் இடியும் மின்னலுமாய் கோடை மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. குளுமையான காற்று வீசி திடீரென மழை பெய்தது.

கோடை மழை
மதுரையில் அய்யர்பங்களா, புதூர், திருப்பாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கோடை மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. கல்லுப்பட்டி, டி.குண்ணத்தூரிலும் பிற்பகலில் திடீரென மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

குளிர்ந்த காற்று
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோடை மழை கொட்டித்தீர்த்தது. திண்டுக்கல், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பிற்பகலில் மிதமான மழை பெய்தது. சென்னையில் காலை நேரத்தில் சாரல் மழை பெய்தது.

இடி மின்னலுடன் மழை
வானிலை மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

மழை பெய்ய வாய்ப்பு
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், தருமபுரி ஆகிய 15 மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கோடையின் வெப்பத்தில் தவித்த மக்களே மழையை என்ஜாய் பண்ணுங்க.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications