"மயிலாப்பூர்" போறீங்களா.. கவனமா இருங்க.. வால்பாறையில் ஆரம்பிச்சிடுச்சு.. தமிழ்நாடு வெதர்மேன் பரபரப்பு
சென்னை: மழை மற்றும் வெப்பநிலை அறிவிப்பு குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்..
தமிழ்நாட்டையே கதிகலங்க வைத்த அக்னி நட்சத்திரம் ஒருவழியாக முடிந்துவிட்டது.. நட்சத்திரம்தான் போய்விட்டது. அக்னி இன்னமும் இங்கேயே இருப்பதாக நெட்டிசன்கள் பொருமி தள்ளி வருகிறார்கள்.

வெயில்: அந்த அளவுக்கு வெயில் வாட்டி கொண்டிருக்கிறது.. அக்னி வருவதற்கு முன்பே வெயில் ஆட்டம் காட்ட ஆரம்பித்தது. அக்னி சென்றும் இன்னும் முடியவில்லை.. பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.. மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுவது தள்ளி போயிருப்பதை தவிர, அனைத்து தரப்பினருக்குமே இந்த வெயில் கொடுமையாக இருந்து வருகிறது..
இப்போது, வேலூர் மட்டுமல்லாது சென்னை, மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது.
வெப்பக்காற்று: சென்னையை பொறுத்த அளவில் வெயில் 104 டிகிரி எனும் அளவுக்கு வீசி வந்தது, அத்துடன் அனல் காற்றும் வீசியது... வெப்பக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து கொண்டுதான் உள்ளது.. ஜூன் 9ம் தேதி அதாவது இன்று முதல் சென்னையில் அதீத வெப்பம் குறையும் என்றும், சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெப்பம் குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால், அவ்வளவாக வெப்பம் குறையவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான், இன்றைய தின வானிலை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதில், வடதமிழ்நாட்டில் வெப்பமான நாள் இன்று என்று குறிப்பிட்டுள்ளார்..

அதாவது, "இன்று 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் எட்டியுள்ளது.. சென்னையின் பல இடங்களில், குறிப்பாக கடற்கரை பகுதிகளான பாலவாக்கம், மயிலாப்பூர், எம்ஆர்சி நகர் போன்ற இடங்களில் வெயில் 105 டிகிரியை எட்டியிருக்கிறது.. இன்னும் 2 நாளில் இந்த நிலைமை தணியும் என்கிறார்" வெதர்மேன்.
திருவள்ளூர்: அதேபோல, மழை நிலவரம் குறித்தும் வெதர்மேன் பகிர்ந்து கொண்டுள்ளார்.. திருவள்ளூர் பகுதியில் கடற்காற்று வீசி வருவருகிறதாம்..
கேரளாவை பொறுத்தவரை, பருவமழை தொடங்கிவிட்டது என்றும், வால்பாறையிலும் தற்போது கனமழை பெய்து வருவதாகவும் பதிவு செய்துள்ளார்.. முக்கியமாக, வேலூரில் இன்று மதியம் 102 டிகிரி வரை வெயில் அடித்துள்ளது.. ஆனால், அதற்கு பிறகு மழை வெளுக்க துவங்கியுள்ளது. அரைமணி நேரம் விடாமல் பெய்துள்ளது.. அதுவும் ஆலங்கட்டி மழையே பெய்தது என்கிறார் வெதர்மேன்.
ஆலங்கட்டி மழையா?? அதுவும் நம்ம "வெயில்" வேலூரிலா? என்று ஆச்சரியத்துன் கேட்டு வருகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்..!!












Click it and Unblock the Notifications