நான், விஜயலட்சுமி வர்றோம்..மனைவி கயல்விழி வர ரெடியா? சீமானுக்கு வீரலட்சுமி கேள்வி- அப்புறம் தேன்மொழி?
சென்னை: திருமண மோசடி புகார் விவகாரத்தில் தாமும் நடிகை விஜயலட்சுமியும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஒரு சேர விசாரணைக்கு தயார்; அதேநேரத்தில் சீமான் மனைவி கயல்விழியையும் அழைத்து வர தயாரா? என தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் மீதான திருமண மோசடி புகாரில், நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தார் சீமான் என்ற புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

சீமான் பதில் நடவடிக்கை: இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். 2 முறை சம்மன் அனுப்பியும் பலனில்லை. தற்போது நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்புவதாக கூறி ரூ1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் சீமான்.
வீரலட்சுமி 'வீடியோ': அத்துடன் தற்போது சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி ஆகியோருடன் ஒரு சேர தம்மை விசாரணை செய்ய வேண்டும் என சீமான் புதிய நிபந்தனை விதித்துள்ளார். சீமானின் இந்த நிபந்தனைக்கு வீரலட்சுமி பதில் அளித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சீமான் அவர்களே! வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 2-வது சம்மனுக்கு ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது. மிக்க மகிழ்ச்சி. ஆனால் விஜயலட்சுமியும் வீரலட்சுமியாகிய நானும் சேர்ந்து ஆஜராக வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள். உங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். நானும் விஜயலட்சுமியுடன் சேர்ந்து விசாரணைக்கு வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை.
கயல்விழி, தேன்மொழி: இந்த வழக்கில் உங்கள் மனைவி கயல்விழி மீதும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு வைத்துள்ளார். தேன்மொழி என்ற பெண்ணும் விசாரணைக்கு ஆஜராவதாக இருந்தது. நானும் விஜயலட்சுமியும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளோம். இவ்வாறு வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications