விஜயலட்சுமிக்கு செட்டில் செய்த சீமான்! மீசை வெச்ச ஆம்பளையா? சொடக்கு போட்டு சீறிய "ஷத்ரிய" வீரலட்சுமி
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்னை தொட்டுப் பார்த்தால் பல நூறு மடங்கு படையை இறக்கிவிடுவேன் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கட்சியாவது ஒன்னாவது வீரலட்சுமியை வெட்டிப் போட்டு போய்கிட்டே இருப்பேன்.. ஸ்கெட்ச் போட்டு தூக்குமோ? ஸ்கெட்ச்சையே தூக்க முடியாது உன்னால.. என கடுமையாகத் தாக்கி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் முன்பாக வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் சுற்றி வளைத்து தாக்க முய்னறனர். அப்போது செய்தியாளர்களிடம் வீரலட்சுமி கூறியதாவது: பயம் என்பது இந்த வீரலட்சுமியின் சரித்திரத்திலேயே கிடையாது. சீமானுக்கு 61 வயசு. என் அப்பன் ஸ்தானம். என்னை வாடி போடின்னு இழிவு சொல்லால பேசுனால எனக்கு கவலை இல்லை.
எனக்கும் ஒரு கூட்டம்: தமிழ்நாட்டுல எல்லாருக்குமே ஒரு கூட்டம் இருக்கு. என்கிட்ட இருக்கிற கூட்டம் பல நூறு மடங்கு. என் கூட்டத்தை நான் இறக்குனா... நான் வன்முறையில் ஈடுபடலை. நான் வன்முறையில் ஈடுபடக் கூடாதுன்னுதான் பேசிகிட்டு இருக்கேன்.
வன்னியர் குல ஷத்ரிய மகாராணி: என் தாத்தா கதிர்வேல் நாயக்கரும் என் பாட்டி எல்லம்மாளும் என்னை சின்ன வயசுல இருந்தே சொல்லி வளர்த்திருக்காங்க.. நீ வன்னியர் குல ஷத்ரிய குடும்பத்துல பிறந்த மகாராணி. உன் காலில் ஒருத்தன் மிதிச்சான் அவன் தலையை மிதின்னு சொல்லி இருக்காங்க. நான் ஷத்ரிய குடும்பத்தில் பிறந்தவள். எங்களுக்கு தொழிலே போர் செய்யுறதான். விவசாயம்தான். நாட்டை ஆள்வதுதான் எங்க தொழில்.
அண்ணாசாலை என் மாமனார் நிலம்: சும்மா இந்த பூச்சாண்டி காட்டுவது.. வெட்டி போடுவேன்னு நாலு மைக் முன்னாடி பேசுறது எல்லாம் வேண்டாம்.. நான் நடு ரோட்டுல வந்து நிற்கிறேன். அண்ணாசாலையில் நிற்கிறேன். என் மாமனார் சவுகார்பேட்டை வடிவேலு முதலியார்.. அந்த காலத்துலயே... அவரு நிலத்துல வந்து நான் நிற்கிறேன்.
படையை இறக்குனா.. : என் மீது கை வைக்கும் போது நான் என்ன பூப்பறிச்சுகிட்டா இருப்பேன்? என் தம்பிக சும்மா விட்டுருவாங்களா? நான் யாருன்னு தெரியாம விளையாடுற.. என் பின்னாடி பெரிய பல நூறு மடங்கு படையே இருக்கு.. இறக்கிவிட்டா அவ்வளவுதான்.

செட்டில் செய்த சீமான்: விஜயலட்சுமிக்கு சீமான் செட்டில்மென்ட் செய்துவிட்டார். அந்த விவகாரம் எனக்கு 2 நாட்களுக்கு முன்னரே தெரியும். அதனால்தான் விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றார்.
சொடக்கு போட்டு சவால்: சரியான ஆம்பளை... நாம் தமிழர் கட்சியில எவனாவது ஒரு மீசை வெச்ச ஆம்பளை இருந்தீங்கன்னா நான் நிற்கிறேன்..
என்னை சரிக்கு சரியான ஆம்பளையாகத்தான் சீமான் பார்க்கிறார்... அதனால்தான் அரிவாளால் வெட்டுவேன் என்கிறார்.. நானும் அரிவாள் எடுக்கிறேன். நான் வன்முறையை கையில் எடுக்கவில்லை. எந்த ஆயுதமும் வேண்டாம். தனியாக ஒரு ஆளாக வந்து நிற்கிறேன். ஆம்பளையா இருந்த வந்து வெட்டிப் போட்டுட்டு போக சொல்லுங்க. இவ்வாறு விரல்களில் சொடக்கு போட்டு சவால் விட்டார் வீரலட்சுமி.












Click it and Unblock the Notifications