“வாங்கி வாங்கியே பழக்கப்பட்ட தமிழ் இப்போதுதான் கொடுக்கப் பழகியிருக்கிறது”.. வைரமுத்து சொன்ன சேதி!
சென்னை: தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு புத்தகமாக வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
அறிஞர் அண்ணா, கருணாநிதி, புதுமைப்பித்தன், சுஜாதா, ஜெயமோகன் உள்ளிட்ட பலரின் சிறந்த சிறுகதைகளோடு தமது சிறுகதையான 'தூரத்து உறவு' கதையும் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்துள்ளதாக வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"இதனால்
இலக்கியச் சமூகத்திற்கு
ஒரு நல்லசெய்தி அறிவிக்கிறேன்
ஜெர்மானிய மொழியில்
வெளிவந்திருக்கின்றன
தமிழ்நாட்டின்
தலைசிறந்த எழுத்தாளர்களின்
சிறுகதைகள்
திறமான புலமையை
வெளிநாட்டார்
வணக்கம் செய்திருக்கிறார்கள்
அறிஞர் அண்ணா
கலைஞர் கருணாநிதி
புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி
சூடாமணி
தோப்பில் முகமது மீரான்
சுந்தர ராமசாமி
சுஜாதா
அம்பை
ஜெயமோகன்
ராமகிருஷ்ணன்
இமயம்
பெருமாள் முருகன்
தமயந்தி
பாமா
ஆகியோரின்
தலைசிறந்த சிறுகதைகளோடு
வைரமுத்து சிறுகதைகள் நூலின்
முதல் சிறுகதையான
'தூரத்து உறவு'
ஜெர்மானிய மொழியில்
மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது
Draupadi Verlag
நிறுவனத்தில் சார்பில்
Christian Weiss
வெளியிட்டிருக்கிறார்
இதனால்
— வைரமுத்து (@Vairamuthu) July 30, 2025
இலக்கியச் சமூகத்திற்கு
ஒரு நல்லசெய்தி அறிவிக்கிறேன்
ஜெர்மானிய மொழியில்
வெளிவந்திருக்கின்றன
தமிழ்நாட்டின்
தலைசிறந்த எழுத்தாளர்களின்
சிறுகதைகள்
திறமான புலமையை
வெளிநாட்டார்
வணக்கம் செய்திருக்கிறார்கள்
அறிஞர் அண்ணா
கலைஞர் கருணாநிதி
புதுமைப்பித்தன்
கு.அழகிரிசாமி, சூடாமணி… pic.twitter.com/PfGewP6xfD
பலவற்றையும்
வாங்கி வாங்கியே
பழக்கப்பட்ட தமிழ்
இப்போதுதான்
கொடுக்கப் பழகியிருக்கிறது
சிறகும் நெஞ்சும்
விரிகின்றன
இது போதாது
இன்னும் இன்னும் வேண்டும்
நாம்
பெரிதினும் பெரிது கேட்பவர்கள்"
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications