அடடே.. களத்தில் குதித்த அடுத்த வாரிசு.. தமிழச்சிக்கு ஆதரவாக வீடு வீடாக மகள் பிரச்சாரம்!
சென்னை: திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அவரது மகள் சரயூ வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். இவர் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகனாவார்.
இவரது இயற்பெயர் சுமதி. சென்னை கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றிய இவர் சிறந்த இலக்கியவாதியாவார். இவர் திமுக, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.
நீட் வேண்டுமா.. வேண்டாமா.. இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18- ப.சிதம்பரம்
வாக்குச் சேகரிப்பு
இவருடன் சேர்ந்து திமுக முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியனும் தேர்தல் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக அவரது மகள் சரயூ வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னுரிமை
அவர் நந்தனம் பகுதியில் உள்ள வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுகவை பொதுவாக வாரிசு அரசியல் செய்யும் கட்சி என கூறுவதுண்டு. தேர்தலிலும் வாரிசுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு.
வாரிசு அரசியல்
தற்போது கருணாநிதிக்கு ஸ்டாலின் இருந்தது போல், ஸ்டாலினுக்கு மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் உள்ளனர். இதில் உதயநிதி தற்போது போராட்டக் களங்களிலும் பிரசாரக் கூட்டங்களிலும் காணப்படுகிறார். இதுவும் ஒரு வகை வாரிசு அரசியல்தான்.
பரபரப்பு
இவர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்த போது அழகான வேட்பாளர் என கூறியது வைரலானது. இந்த நிலையில் இவரது மகள் சரயூவும் தற்போது களம் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.