Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“தமிழிசையால் காணாமல் ஆக்கப்பட்டு இருப்பேன்..” சோபியா பரபர கடிதம் -பாஜகவை எதிர்த்து மீண்டும் முழக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்பாக கோஷம் எழுப்பிய வழக்கில் இருந்து மாணவி சோபியா விடுவிக்கப்பட்ட நிலையில் தனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "என் மீதான முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) இன்று அளித்த தீர்ப்பு, எனது 5 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

 Tamilisai and police will close me - Student Sophia open up on Tuticorin airport issue

"பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என்ற நான்கு வார்த்தைகளை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் செவிகளில் கேட்கும் அளவுக்கு ஒருமுறை தான் கூறினேன். அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகள்-கட்சி ஆட்களை என் மேல் ஏவியது, நடந்ததை தவறாக சித்தரித்தது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி என்னை மிரட்டியது மற்றும் சட்டரீதியாக துன்புறுத்தியது ஆகியவை அனைவரும் அறிந்ததே.

இது ஒரு கடினமான போராட்டமாக இருந்தது. எனது வழக்கறிஞர் டி. கீதா மற்றும் அவரது குழுவிற்கு நான் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியது சர்ச்சையாக்கப்பட்டவுடன் எனது ஒரே நோக்கம், அந்த நான்கு வார்த்தைகள் கவனம் சிதறாமல் குறி தவறாமல் நான்கு திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும் என்பதே.

என்னுடைய அந்த மௌனத்தை நிரப்பி, என் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, எனது உரிமைகளுக்காக குரல் கொடுத்த மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் உட்பட அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பெரிய அளவில் அரசியல் நெருக்கடி மற்றும் துன்புறுத்தல்களிடம் இருந்து நான் தப்பிக்க மிக முக்கிய காரணம் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், பொது வாழ்வில் உள்ள முற்போக்குவாதிகள், மற்றும் பொது மக்கள் அனைவரின் துரிதமான அளவுக்கதிகமான ஆதரவே. நன்றி! நன்றி!

இல்லாவிடில், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகளால் நான் காணாமல் போயிருப்பேன். இறுதியாக, நாம் அனைவரும் அரசியல் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும், பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் என்றும் நான் மனதார விரும்புகிறேன். ஆழ்ந்த நன்றியுடன், சோபியா." என்று குறிப்பிட்டு உள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் கடந்த 2018ம் ஆண்டு அப்போது பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவி சோபியா "பாசிச பாஜக ஆட்சி ஒழிக" என்று முழக்கங்களை எழுப்பினர். அவரை தமிழிசை தலைமையில் பாஜகவினர் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சோபியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் நேற்று விடுவிக்கப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+