ப சி யின் அதிகார பசி?? மோடியை எதிர்த்து பொங்குவதன் காரணம் புரிகிறது.. தமிழிசை காட்டம்!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மோடியை எதிர்த்து பொங்குவது ஏன் என தமிழிசை காட்டமாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய, மே 30-ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ஓ.பி.ஷைனி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. வருகிற மே 30-ந் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். மேலும் அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் சிதம்பர ரகசியங்கள் என்றும் பிரதமர் மோடியை எதிர்த்து ப.சிதம்பரம் பொங்குவது என புரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, சிதம்பர ரகசியங்கள்? ??ப சி யின் அதிகார பசி?? மோடியை எதிர்த்து பொங்குவதன் காரணம் புரிகிறது!வெளிநாடுகளில் பதுக்கல் விபரம் வெளியே வராமல் பெயில் குடும்பம்.?பதுங்குவதை 15லட்சம் எங்கே என கேள்வி கேட்ட ஸ்டாலின் வெளிக்கொணர்வாரா?அங்கே பதுக்கிவிட்டு இங்கே 15 லட்சம்? கேட்ட அறிவாளிகள்????
சிதம்பர ரகசியங்கள்? ??ப சி யின் அதிகார பசி?? மோடியை எதிர்த்து பொங்குவதன் காரணம் புரிகிறது!வெளிநாடுகளில் பதுக்கல் விபரம் வெளியே வராமல் பெயில் குடும்பம்.?பதுங்குவதை 15லட்சம் எங்கே என கேள்வி கேட்ட ஸ்டாலின் வெளிக்கொணர்வாரா?அங்கே பதுக்கிவிட்டு இங்கே 15 லட்சம்? கேட்ட அறிவாளிகள்???? https://t.co/nr0AWibx35
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 7, 2019












Click it and Unblock the Notifications