ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி?.. தமிழிசை பதில்
Recommended Video
சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக, பாமக, புதிய நீதி கட்சி, தமாகா, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்தன. இதில் வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் பிளாப் ஆனது. அதிமுகவில் கூட ஓபிஎஸ் மகனை தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் தோல்வியுற்றனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பே தனது மகனுக்கு அமைச்சர் பதவிக்கு ஓபிஎஸ் அடிபோட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதற்காக காவி உடை அணிந்து கொண்டு தந்தையும் மகனும் டெல்லியையே வலம் வந்தனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பதை பிரதமர்தான் முடிவு செய்வார்.
தமிழகத்தில் பாஜகவின் பின்னடைவு ஒரு தற்காலிகமானது. அதை விரைவில் சரி செய்வோம் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications