திருமா நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு மெயின் ஸ்பான்ஸரே டாஸ்மாக்தானாமே தெரியுமா? தமிழிசை கிண்டல்
சென்னை: திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஸ்பான்ஸர்ஸ் யாரென்றால் டாஸ்மாக்தான் என தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: திருமாவளவன் அவர்கள் சிறுத்தையாக ஆரம்பித்து சிறுத்து போயிருக்கிறார் அவ்வளவுதான்! மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிறகு ஆட்சியில் பங்கு கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டு அது நான் இல்லை, அட்மின்தான் என கூறிவிட்டார்.

சினிமா மாதிரியான ஒரு டிராமா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஆளும் கட்சிக்கு எதிராகவே மாநாட்டை நடத்துவோம் என்றெல்லாம் கூறிவிட்டு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்ததும் சிறுத்து போய்விட்டார்கள்.
திமுகவை மேடையில் வைத்துக் கொண்டு திருமாவளவனால் மது ஒழிப்பு குறித்து பேச முடியுமா? என்ன மாதிரியான கண்டனத்தை நீங்கள் தெரிவிக்க போகிறீர்கள்? நான் ஒரு கார்ட்டூன் படித்தேன். இந்த மது விலக்கு மாநாட்டிற்கு ஸ்பான்ஸர்ஸ் யார் என்றால் டாஸ்மாக்தான். என்ன நடக்குது? கடந்த 3 ஆண்டுகளாக திருமாவளவனுக்கு மதுவிலக்கை பற்றி அக்கறை இல்லை.
தற்போது 2026 ம் ஆண்டு பக்கத்தில் வந்துவிட்டது. தேசிய கல்வி கொள்கையை ஒப்புக் கொள்ளவில்லை. தேசிய மது கொள்கையை மட்டும் ஒப்புக் கொள்வீர்களா? மாநில உரிமைகள் எங்கே போகிறது, மாநில சுயாட்சி எங்கே போகிறது. மதுவிலக்கை பாஜகவும், பாமகவும் வேகமாக எடுத்துச் சென்றிருக்கிறது. இதுவரை திருமாவளவன் அட்மின் என சொல்லி கேள்விப்பட்டதில்லை. தாங்கள் ஒரு தவறு செய்துவிட்டோம் என்பதை அட்மிட் செய்ய முடியாமல் அட்மின் மீது பழி போடுகிறார். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். அதற்காக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச் ராஜா சொன்னதை போல் பிரதமரின் 74 ஆவது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு தொண்டரும் 74 உறுப்பினர்களை சேர்க்குமாறு முனைப்புடன் ஈடுபட்டுள்ளோம்.
மேலும் பிரதமரின் பிறந்தநாள் தொடங்கி மகாத்மா காந்தி பிறந்தநாள் வரை சேவை தினங்களைக் கொண்டாடுகிறோம். கட்டணமில்லா பேருந்து பயணம், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், பெண்களை லட்சியவாதிகளாக லட்சாதிபதிகளாக மாற்றி அவர்கள் பல பேருக்கு வேலையளிக்கும் மாபெரும் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னும் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாற்றும் திட்டத்தில் பலனடைய போகின்றனர் என பிரதமர் சொல்லியிருக்கிறார். இதற்காக பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை ஓணம் வாழ்த்தை முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் சொல்லியிருந்தார்.
தமிழக அரசியல்வாதிகளின் பிள்ளைகளில் எவ்வளவு பேர் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் சமச்சீர் கல்வியை படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். அங்கு மும்மொழிக் கொள்கை இருக்கும் போது ஏன் அரசு பள்ளிகளில் இருக்கக் கூடாது. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் யாருக்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என தமிழிசை தெரிவித்தார்.
-
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications