சோபியா கிட்ட கேளுங்க.. கனிமொழி நக்கல்... பாட்ஷா மனைவியை தாக்கியது யாரு.. தமிழிசை சூடான பதிலடி!
தமிழிசை சவுந்தராஜனும் கனிமொழியும் ஒருவர் மீது ஒருவர்விமர்சனம் செய்து கொண்டனர்.
சென்னை: அடடா.. ஜோடி மாறி போச்சே... வழக்கமாக தமிழிசையும், ஜோதிமணியும்தான் ட்விட்டரில் மல்லு கட்டுவார்கள்... இந்த முறை ஜோதிமணி போய் கனிமொழி வந்துவிட்டார்!
தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும், திமுக எம்பி கனிமொழியும் நேருக்கு நேர் மோதுகிறார்கள். இதனால் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது தூத்துக்குடி!
எதிர்பார்த்த தொகுதி கிடைத்துள்ளதால் கனிமொழி உற்சாகத்தோடும், எதிர்பார்க்காத தொகுதி கிடைத்து விட்டாலும், தமிழிசை மனதைரியத்தோடும் தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார்கள்.

சோபியா
தொகுதியில் மல்லுக்கட்டுவது பத்தாமல் ட்விட்டரிலும் சண்டை தொடர்கிறது. இதை முதலில் ஆரம்பித்து வைத்தது கனிமொழிதான். "கருத்து சுதந்திரம் பற்றி கல்லூரி மாணவி சோபியாவிடம் தான் தமிழிசை கேட்க வேண்டும்" என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
|
தமிழிசை பதில்
பாஜகவில் யாரை பற்றி பேசினாலும் சும்மா விடாத தமிழிசை, தன்னை பற்றியே பேசியதற்கு பதிலடி தராமல் இருப்பாரா என்ன? உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், "சாதிக் பாட்சா மரணம் பற்றிய விளம்பரம் செய்த அவரது மனைவி மீது தாக்குதல் நடத்திய திமுக? பற்றி பெண்ணுரிமை பேசும் கனிமொழி? பதில் கூறுவாரா?" என்று நக்கலுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
|
ரயில் பயணம்
ஆனால் இவர்கள் ரெண்டு பேரையும்விட ட்விட்டர்வாசிகள் போடும் சண்டை சுவாரஸ்யமாகவே இருக்கிறது. "ரயிலில் ஸ்டாலின் பயணியை கன்னத்தில் அறைந்தது மற்றும் பல, தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு போன்ற சம்பவங்கள் எந்த சுதந்திரம் மேடம்" என்று கனிமொழிக்கும், "பாசிச பாஜகவிடம் கருத்து சுதந்திரம் மட்டுமல்ல நல்லதை நினைக்க முடியாது" என்று தமிழிசைக்கும் பதிலடி கிடைத்துள்ளது.

கன்னத்தில் அறைந்தது
மேலும் "அதானே.. ரெண்டு பேரும் செஞ்ச தப்ப மாறி மாறி கேள்வி கேட்க வேண்டியது. ஆனால் ரெண்டு பேரும் அதற்கு தேவையான பதில் டுவீட் செய்ய திராணி இருக்கா???" என்று 2பேரையும் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications