செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலர செய்வோம்- தமிழிசை தடாலடி
Recommended Video

சென்னை: செயற்கை மழையை வரவைத்தாவது தாமரையை மலர செய்வோம் என தமிழிசை, ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் குறித்து திருச்சியில் நடைபெற்ற திமுக தோழமை கட்சிகளுடனான ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தண்ணீர் இல்லை.
|
கடும் விமர்சனம்
புல் கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா? குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பாஜக என கடுமையாக விமர்சனம் செய்தார்.

செயற்கை மழை
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம்.

தமிழிசை பதில்
ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்று தமிழிசை பதில் அளித்துள்ளார்.

விமர்சனம்
இதுபோல் மற்றொரு டுவீட்டில் திருமாவளவன்.. ஆர்ப்பாட்டத்தில்... பேசுகிறார்.."திமுக அணியை.. பலவீனப்படுத்த.. பாஜக.. முயல்கிறது.. என்கிறார்... ஆக இவரின் கவலை..அணையைப் பற்றியது அல்ல... அணியைப் பற்றியதுதான்! என்று தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications