மூப்பனார் பிரதமராவதை.. கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆவதைத் தடுத்தது திமுகதானே.. தமிழிசை பரபர பேச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழர்கள் பிரதமராவதை தடுத்ததே திமுகதான் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் பேசியதாவது: மூப்பனார் போன்ற தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்தது திமுகதான். அதே போல் அப்துல்கலாம் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆவதையும் திமுகதான் தடுத்தது.

திமுகவின் பழைய கதையை எல்லாம் தோண்டினால் ஸ்டாலினால் திண்ணை பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாது. திமுக என்றாலே நாடக அரசியல்தான். மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
நிச்சயமாக தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன். திமுக அமமுக கூட்டணி என்று நாங்கள் கூறியது இப்போது உண்மையாகிவிட்டது. வாக்குப் பதிவு இயந்திர மைய அறைகளில் தவறுகள் நடக்கக் கூடாது.
புதிது, புதிதாக நிறைய பிரதமர் வேட்பாளர்கள் முளைக்கிறார்கள். ஆனால் மோடி மட்டுமே உழைக்கிறார் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications