அம்மா வீட்டுக்கு வரும் குழந்தையாக மாறி விடுகிறேன்.. தமிழிசை செளந்தரராஜன் நெகிழ்ச்சி + மகிழ்ச்சி!
தாய்வீட்டுக்கு வரும் குழந்தை போல உணர்வதாக தமிழிசை தெரிவித்துள்ளார்
சென்னை: "அம்மா வீட்டிற்கு வரும் குழந்தையாகவே நான் தமிழகத்துக்கு ஓடி வருகிறேன்" என்று என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமனம் ஆனதில் இருந்தே, அவரை பற்றின பரபரப்பு செய்திகள் குறைந்துவிட்டன. எனினும், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக தமிழிசை கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை, கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சொல்லும்போது,
"கனடா நாட்டில் மகப்பேறு, குழந்தைகளுக்கு ஸ்கேன் பழகி, நிபுணத்துவம் பெற்றிருக்கேன்.. இதுவரை என் மருத்துவத்தில் நான் தவறு செய்ததே கிடையாது..
ஒருநாளைக்கு 50 குழந்தைகளுக்குகூட நான் ஸ்கேன் பார்த்திருக்கிறேன்.. அப்படி ஒரு டாக்டராக இருந்தாலும், அந்த தலைக்கணம் எனக்கு ஏமாறாமல் பார்த்து கொள்வேன்.. டாக்டர் என்ற கிரீடத்தை கழற்றி வைத்து விட்டுதான் பாஜக தொண்டராக கமலாலயத்துக்குள் 20 வருடத்துக்கு முன்பு நுழைந்தேன்.
தெலங்கானா ஆளுநர் மாளிகையை மக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியிருக்கிறேன். எனக்கு முழு சக்தியை தந்ததே இந்த தமிழ்நாடுநான்.
தமிழ்நாட்டுக்கு வரணும் என்றாலே.. 2 நாளைக்கு முன்னாடியே எனக்கு குதூகலம் தொத்திக் கொள்கிறது.. அந்த ஆசை.. அந்த பாசம்.. அந்த அருள் என்னையும் அறியாமல் எனக்கு வந்து விடும்.. அதனால் தமிழ்நாடு வரும்போது, அம்மா வீட்டுக்கு வரும் குழந்தையாகவே நான் மாறிவிடுகிறேன்" என்றார்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications