தமிழ்நாட்டில் இன்று 1585 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 27 பேர் பலி.. 1,842 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1585 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. தினசரி கேஸ்கள் முதல்முறையாக 1600க்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின்பும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கவில்லை.
அதோடு தினசரி டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை புதிய கேஸ்களை விட அதிகமாக இருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது.

இன்றைய நிலவரம்
தமிழ்நாட்டில் இன்று 1585 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 27 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,761 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 1,842 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25,50,710 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,603 ஆக சரிந்து உள்ளது.

வேக்சின்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 26,04,074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,50,911 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,50,297 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 4,03,21,802 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 165 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2049 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 190 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2181 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1638 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications