11 மாவட்டங்கள்.. 11 பெண் ஆட்சியர்கள்.. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை.. தரமான முடிவு.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் அதிக பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொறுப்புகள் அதிக அளவில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். முந்தைய ஆட்சியில் இருந்து எல்லா ஆட்சியர்களும் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியர்கள் பதவி ஏற்று இருக்கிறார்கள்.
கடந்த சில தினங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 93 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

பெண்கள்
இதில் முக்கியமாக பெண்கள் பலருக்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்காத, திறமையான பெண் ஐஏஎஸ் அதிகாரிகள், பல்வேறு துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளனர்.

எத்தனை பேர்
தமிழ்நாட்டில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் மாவட்டங்கள்.
அரியலூர் - ரமண சரஸ்வதி,
சென்னை - விஜயராணி
தருமபுரி - திவ்யதர்ஷினி
காஞ்சிபுரம் - ஆர்த்தி
மயிலாடுதுறை - லலிதா
நாமக்கல்- ஸ்ரேயா பி சிங்
பெரம்பலூர் - வெங்கட பிரியா
புதுக்கோட்டை - கவிதா ராமு
தென்காசி - சந்திரலேகா
நீலகிரி- இன்னொசென்ட் திவ்யா
திருவாரூர் - காயத்திரி கிருஷ்னன்

அதிகம்
தமிழ்நாடு வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இத்தனை பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இவர்கள் எல்லோரும் மிகவும் இளம் வயது அதிகாரிகள். பல்வேறு துறைகளில் தங்கள் திறமையை நிரூபித்து தற்போது ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்டிப்புடன் இருப்பார்கள், மக்களுடன் நெருக்கமாக இருப்பார்கள், துரிதமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கருத்து உண்டு.

ஏன்
அதை மெய்ப்பிக்கும் வகையில் கொரோனா காலம் என்பதால் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். கொரோனாவிற்கு பின் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும், துரிதமாக செயல்பட வேண்டும் என்பதால் வயது குறைந்த, திறமையான பெண் ஐஏஎஸ் அதிகாரிகளை ஆட்சியர்களாக நியமித்துள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications