11 மாவட்டங்கள்.. 11 பெண் ஆட்சியர்கள்.. தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறை.. தரமான முடிவு.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் அதிக பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொறுப்புகள் அதிக அளவில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். முந்தைய ஆட்சியில் இருந்து எல்லா ஆட்சியர்களும் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியர்கள் பதவி ஏற்று இருக்கிறார்கள்.
கடந்த சில தினங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 93 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் 29 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

பெண்கள்
இதில் முக்கியமாக பெண்கள் பலருக்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்காத, திறமையான பெண் ஐஏஎஸ் அதிகாரிகள், பல்வேறு துறையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 11 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளனர்.

எத்தனை பேர்
தமிழ்நாட்டில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் மாவட்டங்கள்.
அரியலூர் - ரமண சரஸ்வதி,
சென்னை - விஜயராணி
தருமபுரி - திவ்யதர்ஷினி
காஞ்சிபுரம் - ஆர்த்தி
மயிலாடுதுறை - லலிதா
நாமக்கல்- ஸ்ரேயா பி சிங்
பெரம்பலூர் - வெங்கட பிரியா
புதுக்கோட்டை - கவிதா ராமு
தென்காசி - சந்திரலேகா
நீலகிரி- இன்னொசென்ட் திவ்யா
திருவாரூர் - காயத்திரி கிருஷ்னன்

அதிகம்
தமிழ்நாடு வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இத்தனை பெண் ஆட்சியர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இவர்கள் எல்லோரும் மிகவும் இளம் வயது அதிகாரிகள். பல்வேறு துறைகளில் தங்கள் திறமையை நிரூபித்து தற்போது ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்டிப்புடன் இருப்பார்கள், மக்களுடன் நெருக்கமாக இருப்பார்கள், துரிதமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கருத்து உண்டு.

ஏன்
அதை மெய்ப்பிக்கும் வகையில் கொரோனா காலம் என்பதால் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். கொரோனாவிற்கு பின் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும், துரிதமாக செயல்பட வேண்டும் என்பதால் வயது குறைந்த, திறமையான பெண் ஐஏஎஸ் அதிகாரிகளை ஆட்சியர்களாக நியமித்துள்ளார்.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications