"கிட்னிகள் ஜாக்கிரதை" ஸ்டிக்கருடன் சட்டசபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்! எடப்பாடியின் மாஸ்டர் பிளான்
சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர். இதனால் இன்றைய நாளில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறித்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கிட்னியை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தன.

இதையடுத்து கிட்னி திருட்டு விவகாரத்தை விசாரிக்க உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலையிட முடியாது என்றும், சிறப்பு குழு விசாரணைக்கு தடையில்லை என்றும் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறது. கரூர் விவகாரத்தில் தமிழக அரசு காட்டிய வேகம், கிட்னி திருட்டு விவகாரத்தில் காட்டாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக கார சார விவாதம் நடைபெற்றது. அதிமுகவினர் சட்டசபையில் தர்ணா செய்யும் அளவிற்கு சூழல் சென்றது. இதன்பின் வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் 3வது நாள் சட்டசபைக் கூட்டத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் "கிட்னிகள் ஜாக்கிரதை" என்ற அடைமொழியுடன் கூடிய ஸ்டிக்கரை அணிந்து வந்துள்ளனர். இதனால் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை அதிமுக திட்டமிட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.
-
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications