ஜனவரி 20ல் கூடும் சட்டசபை.. தமிழக அரசின் உரையை ஆளுநர் வாசிப்பார்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை: 2026ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் உரையுடன் சட்டசபைக் கூட்டம் தொடங்கும் என்று கூறிய அப்பாவு, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் சட்டசபையில் வாசிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டம் ஜனவரி 20ல் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி கூடுகிறது. காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார்.

அதன்பின் அன்றைய தினமே சட்டசபைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டசபைக் கூட்டத்தொடர், ஜனவரி 21ஆம் தேதி முதல் ஜனவரி 24ஆம் தேதி வரை 4 நாட்கள் ஆளுநர் உரைய்க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடக்கவுள்ளது.
இதன்பின் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபை மீண்டும் கூட உள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கும். இதனால் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும். இந்தக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி இம்முறையாவது தமிழக அரசின் உரையை வாசிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருமுறை கூட தமிழக அரசின் உரையை வாசித்ததே இல்லை. கடந்த முறை தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார். இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை சபாநாயகர் அப்பாவுவே வாசித்தார்.
இதனால் தேர்தலுக்கு முன் நடக்கும் சட்டசபைக் கூட்டத்திலாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் உரையை வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வரும் சூழலில், இந்த சட்டசபைக் கூட்டத்தில் என்ன நடக்கும் என்று காண்பதற்கு பலரும் எதிர்நோக்கி உள்ளனர்.
-
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications