பாடை + ஜனாசா + காஃபின்.. மும்மத முறையில் இறுதிச்சடங்கு! ஒரு ஆளுநர் என்றும் பாராமல் -அண்ணாமலை காட்டம்
ஆளுநருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சிக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பாக மூன்று மதங்களின் முறையிலும் இறுதிசடங்கு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
அதேபோல் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று பதில் அளித்தார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதமானது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் விமர்சித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சவப்பெட்டியுடன் ஊர்வலம்
இந்த நிலையில் தமிழக ஆளுநரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஆளுநர் மளிகையை நோக்கி சவபெட்டியுடன் ஊர்வலமாக செல்லும் போராட்டம் சின்னமலை ராஜிவ் காந்தி சிலை அருகே நடந்தது. அதில் மனித நேய மக்கள் கட்சியினர் சவப்பெட்டிகளை தூக்கிக்கொண்டு கோஷம் எழுப்பினர். அதேபோல் ஆளுநருக்கு பாடை கட்டி கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் மூன்று மதங்களின் முறையில் ஆளுநருக்கு இறுதிசடங்கு நடத்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்ணாமலை கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் ஆளுநரை தாக்குவதற்கு கூட்டணி கட்சியினரை அனுமதிப்பதன் மூலம் திமுக அரசு மோசமான முன்னுதாரணமாக உள்ளது. அதேபோல் மக்களை குழப்பி, தவறாக வழிநடத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளதாக விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
வரும் 20ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதனை மீண்டும் ஆளுநர் கிடப்பில் போட்டால், அதுகுறித்து அந்த சூழலில் முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications