பாடை + ஜனாசா + காஃபின்.. மும்மத முறையில் இறுதிச்சடங்கு! ஒரு ஆளுநர் என்றும் பாராமல் -அண்ணாமலை காட்டம்
ஆளுநருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சிக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பாக மூன்று மதங்களின் முறையிலும் இறுதிசடங்கு நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சில வாரங்களுக்கு முன் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
அதேபோல் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று பதில் அளித்தார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதமானது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் விமர்சித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

சவப்பெட்டியுடன் ஊர்வலம்
இந்த நிலையில் தமிழக ஆளுநரை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஆளுநர் மளிகையை நோக்கி சவபெட்டியுடன் ஊர்வலமாக செல்லும் போராட்டம் சின்னமலை ராஜிவ் காந்தி சிலை அருகே நடந்தது. அதில் மனித நேய மக்கள் கட்சியினர் சவப்பெட்டிகளை தூக்கிக்கொண்டு கோஷம் எழுப்பினர். அதேபோல் ஆளுநருக்கு பாடை கட்டி கோஷம் எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் மூன்று மதங்களின் முறையில் ஆளுநருக்கு இறுதிசடங்கு நடத்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்ணாமலை கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் ஆளுநரை தாக்குவதற்கு கூட்டணி கட்சியினரை அனுமதிப்பதன் மூலம் திமுக அரசு மோசமான முன்னுதாரணமாக உள்ளது. அதேபோல் மக்களை குழப்பி, தவறாக வழிநடத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளதாக விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
வரும் 20ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதனை மீண்டும் ஆளுநர் கிடப்பில் போட்டால், அதுகுறித்து அந்த சூழலில் முடிவு செய்யப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications