குட்நியூஸ்.. விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் "டைடல் பார்க்ஸ்".. பிடிஆர் அறிவிப்பு!
சென்னை: விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐடி புரட்சியை ஏற்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னோடி. சென்னையில் முதல் ஐடி பூங்காவை கொண்டு வந்து இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்தது. ஆனால் அதன்பின் ஐடி பூங்காக்கள் பெரிய அளவில் சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படவில்லை.
கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் சில நிறுவனங்கள் ஆங்காங்கே தொடங்கப்பட்டாலும் முழுமையாக சென்னையை போல பெரிதாக எங்கும் பல ஐடி நிறுவனங்கள் வரவில்லை. இந்த நிலையில்தான் இன்று பட்ஜெட் உரையில் புதிய டைடல் பூங்காக்கள் குறித்த அறிவிப்பை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

பட்ஜெட்
இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பட்ஜெட் உரையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்கல பூங்கா, பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் ரூ4,500 கோடியில் சர்வதேச அறைக்கலன் தயாரிப்பு பூங்கா அமைக்கப்படும். விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திருப்பூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்

பொயின்கா
ஓசூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும். தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்படும். ரூ225 கோடியில் கோவையில் 500 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். ரூ165 கோடியில் 2 நிதிநுட்ப நகரங்கள் உருவாக்கப்படும். இதற்காக நிதிநுட்ப கொள்கை வெளியிடப்படும்.

சிப்காட்
பின்தங்கிய 9 மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகப்பட்டினம் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும். சிறு, குறு தொழில் சிக்கல்களை ஆராய குழு அமைக்கப்படும்
Recommended Video

சுரங்க கொள்கை
சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நீடித்த நிலையான சுரங்க கொள்கை உருவாக்கப்படும். சுரங்க வருமானம் உயர்த்தப்படும். அரியலூர் -பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ10கோடியில் புவியியல் புதைவடிவ பூங்கா அமைக்கப்படும். மணப்பாறை, தேனி, திண்டிவனத்தில் உணவு பூங்காக்கள் நிறுவப்படும். இங்கு உணவு பொருள் உற்பத்திக்கு கவனம் செலுத்தப்படும், என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications