மார்ச் 24ஆம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
சென்னை: வரும் மார்ச் 24ஆம் தேதி வரை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திமுக அரசு 2022-23 முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழு பட்ஜெட் என்பதால் இதன் மீது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று காலை சட்டசபையில் அமைச்சர் பிடிஆர் பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்யத் தொடங்கினார். அப்போது அப்போது ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அமைச்சர் பிடிஆர் தனது உரையைச் சற்று நேரம் நிறுத்தினார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்து வாசித்தார்.
21 மொழிகளில் பெரியார் சிந்தனை தொகுப்பு, பெண் கல்விக்கு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மேலும், அவர் உலக முதலீட்டாளர்களாக என்று கூறி, பட்ஜெட் உரையில் சில பத்திகளை ஆங்கிலத்திலும் வாசித்தார்.
அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என முடிவ எடுக்கப்பட்டுள்ளது.
நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், வரும் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அதில் மார்ச் 21,22,23 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி பதில் அளிக்கிறார் என்றும் அன்றைய தினம் கேள்வி பதில் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications