செமஸ்டர் தேர்வு.. ஈரானில் தவிக்கும் மீனவர்கள்.. மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி 2 கடிதம்
சென்னை: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வு பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 750 மீனவர்கள் ஈரானில் தற்போது சிக்கி தவித்தனர். இதில் குமரி மாவட்ட மீனவர்கள் மட்டும் 562 பேர் சிக்கி தவித்து வந்தனர். இவர்களை மீட்க அரசு சார்பாக கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 710 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.


ஆனால் கப்பலில் இடம் இல்லை என்று 40 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் அங்கிருந்து தமிழக மீனவர்கள் 40 பேர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஈரானில் சிக்கித் தவிக்கும் 40 தமிழக மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன, என்று முதல்வர் டிவிட் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் தனது இன்னொரு டிவிட்டில் கல்லூரிகள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்கிரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன், என்று தமிழக முதல்வர் டிவிட் செய்துள்ளார்.

முன்னதாக கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும். கட்டாயம் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும், என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் உள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அந்த கடிதத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் வழங்க வேண்டும்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications