செமஸ்டர் தேர்வு.. ஈரானில் தவிக்கும் மீனவர்கள்.. மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி 2 கடிதம்
சென்னை: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வு பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 750 மீனவர்கள் ஈரானில் தற்போது சிக்கி தவித்தனர். இதில் குமரி மாவட்ட மீனவர்கள் மட்டும் 562 பேர் சிக்கி தவித்து வந்தனர். இவர்களை மீட்க அரசு சார்பாக கப்பல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 710 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.


ஆனால் கப்பலில் இடம் இல்லை என்று 40 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் அங்கிருந்து தமிழக மீனவர்கள் 40 பேர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஈரானில் சிக்கித் தவிக்கும் 40 தமிழக மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளேன, என்று முதல்வர் டிவிட் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் தனது இன்னொரு டிவிட்டில் கல்லூரிகள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்கிரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன், என்று தமிழக முதல்வர் டிவிட் செய்துள்ளார்.

முன்னதாக கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும். கட்டாயம் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும், என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் உள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது. அந்த கடிதத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம் வழங்க வேண்டும்.
-
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
ஈரானும் ஊரானும் வாழட்டும்! நீங்க எந்த கட்சி அமெரிக்காவா? ஈரானா? தனது ஸ்டைலில் கமல் சொன்ன வார்த்தை! -
அமெரிக்காவின் பிரம்மாஸ்திரம் எல்லாம் காலி! இப்படித்தான் வீழ்த்தணும்! உலகிற்கே பாடம் எடுக்கும் ஈரான் -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி! போருக்கு நடுவே முக்கிய ஆலோசனை! எரிவாயு நெருக்கடி குறையுமா? -
குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு! -
4 மணி நேரம் கூட ஆகல.. திமிராக மிரட்டிய ஈரான் ராணுவ அதிகாரியை.. குறிவைத்து தூக்கிய இஸ்ரேல்! -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
ஹார்முஸ் ஜலசந்தியை ஏன் மூடுறீங்க? ஈரானுக்கு எதிராக திரண்டு வந்த பிரிட்டன் - பிரான்ஸ் உள்பட 6 நாடுகள் -
அதிமுகவுக்கு கூடுதல் சீட் கேட்டு டெல்லி சென்ற இபிஎஸ்! "அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா? நேரு












Click it and Unblock the Notifications