வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர் - ஆளுநர், முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வீட்டிலேயே களிமண்ணால் செய்த பிள்ளையாரை வைத்து வழிபடுங்கள் என
சென்னை: விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிச்சாமி தனது விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதிக்கவில்லை. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் ஆறு, கடலில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலையை வைத்து வழிபடுவோம் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.

இந்து முன்னணியின் நிலைப்பாட்டிற்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்படியே மத ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் தமிழக மக்களுக்கு சிறப்பான, வளமாக எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் பழனிச்சாமி தனது வாழ்த்துச்செய்தியில், விநாயகரின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர். 'வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்' என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது. விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள் என்று முதல்வர் பழனிச்சாமி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
இதன் மூலம் பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்று உறுதியாக கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications