Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியரசு தலைவர் தேர்தல்! கொரோனா கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார் ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத்தலைவர் தேர்தலில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்.

நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தலைத் தேர்வு செய்ய இன்று நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற அலுவலகம், மாநிலச் சட்டசபை அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.

 குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்த தேர்தலில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தேர்தலில் வாக்களிப்பர். இதற்காக டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிகள் அங்கு வாக்களிக்க உள்ளனர். இதற்காக அனைத்து எம்பிகளும் டெல்லி சென்று உள்ளனர்.

 முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார்

முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார்

அதேபோல தமிழ்நாடு சட்டசபை அலுவலகத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்று முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார். முதல்வர் ஸ்டாலின் முதல் நபராகச் சென்னையில் வாக்களித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாக்குப் பெட்டியில் முதல்வர் ஸ்டாலின் தனது வாக்கைச் செலுத்தினார்.

 மருத்துவமனையில் இருந்து நேரடியாக

மருத்துவமனையில் இருந்து நேரடியாக

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர், நேரடியாகத் தலைமைச் செயலகம் சென்று அங்குக் குடியரசுத்தலைவர் தேர்தலில் முதல்வர் மு.க ஸ்டாலின் வாக்களித்தார்.

 வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் முர்முவிற்கு ஆதரவளித்துள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெல்வது கிட்டதட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதேபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்தத் தேர்தலில் வாக்களித்தார். அவர் அதிமுக மூத்த நிர்வாகிகள் உடன் வந்து வாக்களித்தார். பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கும் திரெளபதி முர்முவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகத் திரெளபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் முர்முவிற்கு ஆதரவளித்துள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெல்வது கிட்டதட்ட உறுதி என்றே கூறப்படுகிறது.

 ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் காலையில் அவர் வாக்களிக்க வரவில்லை. மாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கும் நேரத்தில், ஓ. பன்னீர்செல்வம் முழு கவச உடையில் வந்து தனது வாக்கைச் செலுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+